வெளிச்சத்தில் நிழலாய்
இருளில் இருளாய்த்
தொடருகிறாய் நீ.
உறக்கத்தின் விழிப்பாய்
விழிப்பின் உறக்கமாய்
உறைகிறாய் நீ.
இமைத் துடிப்பின் இருளுக்குள்
தேனருந்திச் சிறகடித்துக்
கிடக்கிறாய் நீ.
பயணமாய்
ஊர்தியாய்
சேருமிடம்
எல்லாமாய் இருக்கிறாய் நீ.