இரவின் உறக்கம்
கரைந்து
ஒற்றைத் துளியாய்ச்
சொட்டியதை
பரிதி குடித்துப் போனது.
வறியப் புல் நுனி நான்.
காலம் என்னும் பெரும் கிளை
கைகளின் வளைப்பில்
தாழ்ந்து சொரிந்து
மீண்ட பின்
நான் மட்டும்
நின்று கொண்டிருக்கிறேன்
பூக்களின் இடையே.