வறள் மணலில் படியும்
பறவையின் சுவடாய்
மறைந்து விடுபவை
உன் மழலை நினைவுகள்.
உன் மழலையை வரைய
ஓவிய மையாய்
விரல்களில் படியும் பனித்துளி கொடுக்கிறாய்.
உன்னைக் கவிதையில் எழுதக்
காகித மையாய்க்
காற்றினில் கரையும்
புன்னகை கொடுக்கிறாய்.
நீராடக் களையும் ஆடையைப் போல
உன் மழலையை என்னிடம்
கொடுத்து வைத்திருக்கிறாய்.