ஒவ்வொரு நாளும்
எனைச் சுற்றிலும்
வழிந்து உருகிப்
பின் இறுகியிருக்கும்
இருளின்
ஏதோவொரு மூலையில்
ஒளிந்து கொண்டிருக்கிறது
என் உறக்கம்.
இருள்
தலையணையாய்
முகம் கவிழ்ந்து
பின் பாறையென அழுத்துகிறது.
பின்
பாறை சிதைந்து
சிறு மணற்றுகள்களாய் உதிர
எனைச் சுற்றிக் குவிகிறது
சமாதி மண்.