30 ஜூன், 2021

பாம்புப் பயணம்


 காலமும்

அதன் முதுகேறிய

வாழ்க்கையும்


ஓசையின்றி

தடயமின்றி


மின்னும் நேரத்தில்

வளைந்து நெகிழ்ந்து

அகன்று குறுகி


எதிர்பாரா ஓர் கணத்தில்

தீண்டி விட்டு

பின்

மறைந்தும் விடுகிறது

பாம்பைப் போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக