30 ஜூன், 2021

சேகரிப்பு


ஒவ்வொரு நாளும்

எனைச் சுற்றிலும்

வழிந்து உருகிப்

பின் இறுகியிருக்கும்

இருளின்

ஏதோவொரு மூலையில்

ஒளிந்து கொண்டிருக்கிறது

என் உறக்கம்.

இருள்

தலையணையாய்

முகம் கவிழ்ந்து

பின் பாறையென அழுத்துகிறது.


பின்

பாறை சிதைந்து

சிறு மணற்றுகள்களாய் உதிர

எனைச் சுற்றிக் குவிகிறது

சமாதி மண்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக