அவன்
தரையில் வேரூன்றி
நின்று கொண்டிருந்தான்.
ஓடும் மனிதர்கள் பலர்
ஓரக்கண்ணில் பார்த்து
இகழ்ச்சிப் புன்னகை பூத்து
மீண்டும் விரைந்தனர்.
பின்னர்
அவனை நோக்கிக்
கற்கள் எறியப் பட்டன.
அப்போதும்
அவன்
அங்கேயேதான்
அசையாமல் நின்று கொண்டிருந்தான்.
கல்வீச்சும் தொடர்ந்தது.
சிறிது காலத்துக்குப் பின்
அவன் நின்றிருந்த இடம்
சிறு குன்றாகி இருந்தது.
அது
அவனை நோக்கி வீசப் பட்ட
கற்களால் ஆகியிருந்தது.
வீசிய கற்கள்
தொட முயன்றுத்
தோற்றுத் தோற்று
அவன் அடியில் தேங்கின.
இப்போது
அவன் நின்றிருக்கும் இடம்
பெரும் மலையாகி இருக்கிறது.
கற்கள் வீசுபவர்கள்
அவன் உயரம் பார்த்து
மலைத்துப் போகிறார்கள்.
அவர்கள் வீசும்
ஒவ்வொரு கல்லுக்கும்
அவனது உயரம்
கூடிக்கொண்டேதான் இருக்கிறது.
தரையில் வேரூன்றி
நின்று கொண்டிருந்தான்.
ஓடும் மனிதர்கள் பலர்
ஓரக்கண்ணில் பார்த்து
இகழ்ச்சிப் புன்னகை பூத்து
மீண்டும் விரைந்தனர்.
பின்னர்
அவனை நோக்கிக்
கற்கள் எறியப் பட்டன.
அப்போதும்
அவன்
அங்கேயேதான்
அசையாமல் நின்று கொண்டிருந்தான்.
கல்வீச்சும் தொடர்ந்தது.
சிறிது காலத்துக்குப் பின்
அவன் நின்றிருந்த இடம்
சிறு குன்றாகி இருந்தது.
அது
அவனை நோக்கி வீசப் பட்ட
கற்களால் ஆகியிருந்தது.
வீசிய கற்கள்
தொட முயன்றுத்
தோற்றுத் தோற்று
அவன் அடியில் தேங்கின.
இப்போது
அவன் நின்றிருக்கும் இடம்
பெரும் மலையாகி இருக்கிறது.
கற்கள் வீசுபவர்கள்
அவன் உயரம் பார்த்து
மலைத்துப் போகிறார்கள்.
அவர்கள் வீசும்
ஒவ்வொரு கல்லுக்கும்
அவனது உயரம்
கூடிக்கொண்டேதான் இருக்கிறது.