11 ஆக., 2012

இவ்வாழ்க்கை

காற்று சுமக்கும் 
சிற்றிலை போலவோ

நதியில் இழுபடும்
மரக்கிளை போலவோ  

ஆனதிந்த வாழ்க்கை.

ஆதியிலிருந்து அறுபட்ட
பட்டமாய்

வேரினிலிருந்து விடுபட்ட
கொடியாய் 

மூலம் தொலைத்து
நலியும் இவ்வாழ்க்கை.

காற்றின் தொடுதலும் 
நதியின் அணைப்பும்

இன்பமென நம்பித்
தொலையும்
இவ்வாழ்க்கை.

அறுபடலும்
விடுபடலும்    
விடுதலை என்று

எண்ணி மயங்கி
ஏமாறும்
இவ்வாழ்க்கை.  
 

  


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக