காற்று சுமக்கும்
சிற்றிலை போலவோ
நதியில் இழுபடும்
மரக்கிளை போலவோ
ஆனதிந்த வாழ்க்கை.
ஆதியிலிருந்து அறுபட்ட
பட்டமாய்
வேரினிலிருந்து விடுபட்ட
கொடியாய்
மூலம் தொலைத்து
நலியும் இவ்வாழ்க்கை.
காற்றின் தொடுதலும்
நதியின் அணைப்பும்
இன்பமென நம்பித்
தொலையும்
இவ்வாழ்க்கை.
அறுபடலும்
விடுபடலும்
விடுதலை என்று
எண்ணி மயங்கி
ஏமாறும்
இவ்வாழ்க்கை.
சிற்றிலை போலவோ
நதியில் இழுபடும்
மரக்கிளை போலவோ
ஆனதிந்த வாழ்க்கை.
ஆதியிலிருந்து அறுபட்ட
பட்டமாய்
வேரினிலிருந்து விடுபட்ட
கொடியாய்
மூலம் தொலைத்து
நலியும் இவ்வாழ்க்கை.
காற்றின் தொடுதலும்
நதியின் அணைப்பும்
இன்பமென நம்பித்
தொலையும்
இவ்வாழ்க்கை.
அறுபடலும்
விடுபடலும்
விடுதலை என்று
எண்ணி மயங்கி
ஏமாறும்
இவ்வாழ்க்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக