4 ஆக., 2012

மழைக்கால இரவுகள்

உடல் சுற்றிய போர்வையாய் 
குளிரீரம் படர,

ஈரம் உள்நுழைந்து
மாயக் கட்டுகளை 
அவிழ்த்து விட,

முளை ஒன்று 
வெளி ஓட்டை உள்ளிருந்து
செல்லமாய் முட்டுகிற    
குறுகுறுப்பை ரசித்திருக்கும்
ஈர மண் புதைத்த விதையாக  

உணர்கிறேன் என்னை 

மழைக்கால இரவுகளில்.


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக