19 ஆக., 2012

விரல்களின் வனம்

யாசகம் கேட்டுக்
கைகளை ஏந்துகிறேன்.

ஏந்திய
உள்ளங்கையில்
விழுகின்றன
விரல்கள்.

ரத்தம் வற்றி  உறைந்து
விறைத்த விரல்கள்.

ரத்தச் செம்மை காணாது
வெளிறிய விரல்கள்.

ரத்தக்  கசிவில் ரேகைகள்
அழிந்த விரல்கள்.

ரத்தச் செழிப்பில் மின்னும்
மோதிர விரல்கள்

என
விழுந்து கொண்டிருக்கின்றன
இன்னும் இன்னும் விரல்கள்.

வீழும் விரல்களைத்
தின்று
என் விரல்கள் செழிக்க

ஏந்திய
உள்ளங்கையில்
வளர்கின்றது
ஒரு விரல்களின் வனம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக