20 ஏப்., 2014

மரணங்கள்

வாழ்நாளின் சுவாசங்களெல்லாம்
ஒற்றைத் துளியாய் இறுகி
என் மேல் சொட்டும்
அக் கணப்  பொழுது

காட்சிப் புலமைனைத்தும்
பார்வைக்  குவியத்தில் திரண்டு
ஒற்றைக் கூர்கதிராய்
தாக்கும் அக் குறு நொடி

பேரலையாகும்  உயிர்ப்பின் மின்னலைகள்
நரம்பு ஊடகங்களை
அறுத்துத் தெறிக்கும்
உணர்வுப் பிரளயத்தின் பின்ன நொடி

எனத்  தன் மரணத்தின் ஒப்பற்ற வலியை
நினைவூட்டி நிகழ்ந்து விடுகின்றன
கையறு நிலையில்
கண்முன் மரணங்கள்.