கடலின் மேல் மிதக்கும்
இலை போல்
நம் வாழ்க்கை.
இலை போல்
நம் வாழ்க்கை.
வீழும் மழைத்துளி
முத்தென உள்ளுறையா
வெற்று இலைதான்
நாம்.
முத்தென உள்ளுறையா
வெற்று இலைதான்
நாம்.
தன்னியக்கம்
தொலைத்து
அலைகளில் கிழிபடும்
மென் னிலைதான்
நாம்.
நம் உயிர்ப்பின்
அசைவுகள்
நம்முடையதல்ல-
ஓயாது சுவாசிக்கும்
கடலின் மார்பின்
விம்மித் தணிதல்கள்.
நம் உயிரினைக் குழைத்து
வார்த்த வனைவுகள்
நிலைப்பவையல்ல-
கடலலையின் வன்கரம்
வரைந்து அழிக்கும்
கரைமணல் ஓவியங்கள்.
எல்லைகளின்றி
நம் உயிரினைக் குழைத்து
வார்த்த வனைவுகள்
நிலைப்பவையல்ல-
கடலலையின் வன்கரம்
வரைந்து அழிக்கும்
கரைமணல் ஓவியங்கள்.
எல்லைகளின்றி
ஆழ்ந்து
அகன்று
உயிர்த்துக் கிடக்கின்றது
கடல்.
அகன்று
உயிர்த்துக் கிடக்கின்றது
கடல்.
அதில்
அறிவும் அற்று
உணர்வும் அற்று
செத்து மிதக்கிறோம்
நாம்.
அறிவும் அற்று
உணர்வும் அற்று
செத்து மிதக்கிறோம்
நாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக